புதன், 30 நவம்பர், 2016



                     


 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்ததிலிருந்து நாடே மோடி அரசிற்கு எதிராக திரண்டு இருக்கிறது. மோடி மீதும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது மக்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறன்றனர். இதை திசை திருப்புவதற்காக மோடி ஆதரவாளர்கள் கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றனர்.

வடக்கில் உள்ள இந்தியர்களின் மனநிலையை திசை மாற்ற ஜாகிர் நாயக் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து அதை பெரிதாக ஊத முயற்சித்தனர். ஆனால் மக்களின் கவனம் பணப்பிரச்சினையிலேயே செலுத்தப்பட்டது.

அதுபோல் தமிழகத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் அவர்கள் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று ஊடகங்கள் ஆதாரமே இன்றி கதறுவதும் தென்னிந்தியாவில் உள்ளவர்களை பணப்பிரச்சினையிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே அறிய முடிகிறது.

அதிலும் தந்தி டிவி பாண்டே போன்றவர்கள் தங்களின் காட்சி ஊடகங்களை தாண்டி தனது முகநூல் பக்கத்தில் கூட இந்த கைது நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அவர்களின் திசை திருப்பும் நாடகம் உள்ளங்கை நெல்லிக்காயாக தெரிகிறது.

தனது மோட்டர் பைக்கை தானே கொளுத்திக் கொண்டு பிறர் மீது பழி போட்டவன், தனது அலுவலகத்திற்குள் தானே குண்டு வீசி பொது அமைதியை கெடுத்தவன், தன் கட்சியை சார்ந்தவனை தானே கொலை செய்து விட்டு அதை பிற சமுதாயத்தினர் மீது போட்டு கலவர தூபத்ததை தூவியவன், பிரேத ஊர்வலம் என்கிற பெயரில் கடைகளை உடைத்து மொபைல் போன்களையும், பிரியாணி அண்டாக்களையும் திருடியவன் என்று அனைத்து விதமான போக்கிரித்தனத்திற்கும் பெயர் பெற்ற பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது பாண்டேக்கள் இப்படி தனது முகநூல் பக்கங்களில் ஒப்பாரி வைத்ததுண்டா?

இதுபோன்ற போக்கிரித்தனமானவர்களை பார்த்து கவலையாக இருக்கிறது என்றும் இவர்கள் ஏன் இப்படி திசை மாறிப்போனார்கள் என்றும் தனது முகநூல் பக்கத்தில் புலம்ப முடிந்ததா?

முடியவில்லையே ஏன்? ஏனெனில் இவர்களின் நோக்கம் ஒரு சமுதாயத்தை குற்றப்படுத்தியே தன்னை வளர்த்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு தந்திரம் தானே? மோடியின் தீவிரவாதத்தால் மக்கள் வங்கிகளின் வரிசையில் நின்று செத்து மடிவதையும், இன்னபிற வழிகளில் அவர்கள் துன்புறுவதையும் திசை திருப்பும் நாடகம் தானே?

நாம் எத்தனை முறை ஊடக பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தினாலும், நாங்கள் அப்படியல்ல, நாங்கள் உங்களுடனயே பயணிக்கிறோம் என்று சொல்லி நம் கழுத்தறுப்பதில் பாண்டேக்களும், சில முகநூல் பிரபலங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது மிகுந்த வருத்தப்படச் செய்கிறது.
அன்பின் அறிவழகன்
அம்மா! அம்மா!

✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :
கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும்,
இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!

✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்.

✏ தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம்
செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.
அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.

✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.
*
✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.

✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.

✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'

✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்

✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்

✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.
 நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு

✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?

✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.

✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!

✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை
என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.

✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.

✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.

✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!

✏ 'அம்மா...!' அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!      


                        "ரேசன் கடைகளை மூடும் பணிகளை தொடங்கி விட்டனர்" 

ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு WTO வில் கையெழுத்திட்டு விட்டதை அம்பலப்படுத்தி கடந்த மே மாதம் மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மே பதினேழு இயக்கத்தின் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பெருமளவில் சென்று சேர்ந்ததால், பாஜகவின் வர்த்தகத் துறை அமைச்சரவையிலிருந்து நிர்மலா சீத்தாராமன், ரேசன் கடைகளை மூட கையெழுத்திடவில்லை என பொய் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பினார்.
நிர்மலா சீத்தாராமன் சொல்வது பொய் என்று அனைத்து ஊடகங்களிடமும் பேசி ஆதாரங்களை அனுப்பி வைத்தோம். ஆனால் நிர்மலா சீத்தாராமனின் அறிக்கையை வெளியிட்ட ஊடகங்களுக்கு நாங்கள் அனுப்பியதை வெளியிடும் நேர்மை வரவில்லை.

இன்று பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் இந்த விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி விட்டு ஏமாற்றி மக்களை கூட்டம் கூட்டமாக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

எதற்காக இந்த படிவம் கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் ஆதார் அட்டைகளை Xerox எடுக்க மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து ஆதார் கார்டு எண்களையும் வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படிவத்தில் Bullet Mark ல் இருக்கிற இரண்டாவது Point ன் படி,
"Have the Aadhar Number mapped with my bank account at NPCI to enable me to Receieve Direct Benefit Transfer from Govt Of India/ State Government through my account subject to eligibility."

அதாவது Direct Benefit Transfer ன் மூலமாக இந்திய அரசு/மாநில அரசு பணத்தை நேரடியாக என் வங்கிக் கணக்கில் அளிக்குமாறு கோரி மக்களே எழுதிக் கொடுப்பது.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்தியாவின் ஏராளமான மக்களை பசியிலிருந்து காத்து வருவது நியாய விலைக் கடைகள்தான்.

Direct Benefit Transfer என்பது ரேசன் கடையில் வழங்கப்படும் அந்த நியாய விலைப் பொருட்களை நிறுத்தி விட்டு, அந்த பொருட்களுக்கான மானியத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம். பொருட்களை நீங்கள் வெளிச் சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது.

இன்னும் சில காலத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு எந்த பொருளையும் வழங்காது. நம்மிடமிருந்து நாம் பயன்படுத்துகிற அனைத்துப் பொருட்களுக்கும் வரியைப் பிடுங்கிற அரசு, இந்த அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கியாக வேண்டும் என்பது நமது உரிமை. நமது உரிமையை சலுகையாக பார்க்கிற மனநிலைக்கு அரசு நம்மை தள்ளியுள்ளது.

வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட உள்ள மானியமும் பொருளாதார சரிவு என்று நீலிக் கண்ணீர் விட்டு ஒருநாள் முழுமையாக நிறுத்தப்படும். அதுவும் Subject to eligibility என்ற வார்த்தைகளை கவனிக்கவும். 500, 1000 தடை என்பதன் வாயிலாக எளிய மக்களின் மீது மோடி அரசு தொடுத்த போர் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. தங்கள் இத்தனை கால சேமிப்பினை எடுத்துப் போய் வங்கிக் கணக்கில் சேர்த்த மக்களிடம் அந்த Account ல் இருக்கும் பணத்தையே காரணம் காட்டி மானியங்கள் மறுக்கப்படும். ரேசன் கடைகள் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கருவிகள், மின்சாரம், இடுபொருட்கள் போன்றவற்றின் மானியங்களும் நிறுத்தப்பட உள்ளது.

தடையற்ற வெளிநாட்டு கம்பெனிகளின் இறக்குமதிக்கும் அனுமதியளித்தே WTO வில் இந்தியா கையொப்பமிட்டிருக்கிறது. அதாவது வெளிநாட்டு உணவு நிறுவனங்கள் நேரடியாக உணவுப் பொருட்களை நமது சந்தையில் இறக்குமதி செய்யும்.
முன்பு இப்படி வெளிநாட்டு உணவு நிறுவனங்கள் நம் சந்தைக்குள் நுழைய வேண்டுமென்றால் அவர்களுக்கு அதிக வரிவிதிப்பு உண்டு. உள்நாட்டு சிறு விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களின் மீது அதிகபட்ச வரியினை விதித்து அந்த கார்பரேட் பூதங்களிடமிருந்து நம்மவர்களை அரசு காப்பாற்றி வந்தது. இப்போது அந்த வரிவிதிக்கும் முறையினை தகர்த்துத்தான் WTO(World Trade Organisation) வில் பையெழுத்திட்டிருக்கிறது இந்திய அரசு.

Wallmartம், கடனை வாங்கி தூக்கில் தொங்கும் நம் விவசாயியும் ஒன்றாக போட்டி போடவேண்டுமென்று மோடியின் சமூக நீதி சொல்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கிற கவர்ச்சிகர விளம்பரங்களுக்கும், Exclusive Day by Day Offer களுக்கும் மயங்கி, மோடி அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் Cashless Transaction மூலமாக Visa காரனுக்கும், Mastercard காரனுக்கும் ஒரு Service chargeஐ செலுத்தி விட்டு நாமெல்லாம் வெளிநாட்டு Showroom களில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் திட்டம்.

மண்ணெண்ணெய் இனி ரேசன் கடைகளில் வழங்கப்படாது என்றும் மானியம் Direct Benefit Transfer முறையில் தான் வழங்கப்படும் என்றும் கடந்த மாதம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 9 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இலக்கு உணவுப் பொருட்கள்தான். இந்தியாவின் 31 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பு என்பது கிடையாது. அவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பித்தான் வாழ்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் எதிர்காலம் மண்ணெண்ணெய் விளக்குகளில்தான் ஒளிரிக் கொண்டிருக்கிறது. ஏராளமான வீடுகளில் எரிபொருளாகவும் மண்ணெணெணெயைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தில்தான் முதல்கட்டமாக இந்திய அரசு கையை வைத்திருக்கிறது.

ரேசன் கடைகளை மூடுகிறோம் என சொன்னால் மிகப் பெரிய எதிர்ப்பை மக்களிடம் சந்திக்க நேரிடும் என்பதால், Direct Benefit Transfer என்ற கவர்ச்சியான பெயரைச் சொல்லி ஏமாற்றி இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய மக்களை வரிசையில் நிறுத்தியிருக்கிறது.

எதற்காக இந்த Form ஐ எழுதிக் கொடுக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ பணம் வரப் போவதாக நினைத்துக் கொண்டு மக்களும் Xerox கடைகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு புரிந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த Form வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, மக்களை வெளிநாட்டு நிறுவனங்களின் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் சதிகளை தெரிந்திருந்தும் மக்களிடம் அம்பலப்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது தொழிலாளர்களின் நண்பன் என சொல்லிக் கொள்ளும் சிபிஎம் கட்சி.

500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்தின் பின்னணியில் சதித் திட்டங்களை அம்பலப்படுத்தாமல், ரேசன் கடைகள் மூடப்படப் போவதையும் அம்பலப்படுத்தாமல், விவசாய மானியங்கள் நிறுத்தப்படப்போவதையும் அம்பலப்படுத்தாமல் வெறுமனே மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போலிப் போராட்டங்களை சிபிஎம் கட்சி மற்ற எதிர்கட்சிகளோடு சேர்ந்து நடத்தி வருகிறது.

Direct Benefit Transfer என்று சொல்லப்படக்கூடிய அயோக்கியத்தனத்திற்காகத் தான் ஆதார் கார்டு கொண்டுவரப்பட்டது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திருட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேசன் கடைகள் மூடப்படும் அயோக்கியத்தனத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்ட முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் தயாராக வேண்டும். மிகப் பெரிய மக்கள் விரோத நடவடிக்கையை சத்தமே இல்லாமல் மோடி கும்பல் உலக வங்கி, IMF, WTO போன்ற முதலைகளுடன் சேர்ந்து நிறைவேற்றி வருகிறது.



இவனா யிரு


உழுது  விதைப்பவன்
உணவை  விளைக்கிறான்
எழுதிப்  படைப்பவன்
எண்ணம்  விதைக்கிறான்.

தொழுது  துதிப்பவன்
தூய்மை  யுறுகிறான்
பழுது  அற்ற  நற்
பண்பைப்  பெறுகிறான்

பொழுது  புலர்கையில்
ஒழுகும்  கதிரைப்போல்
முழுதும்  நல்லதாய்
ஒழுக்கம்  வளர்க்கிறான்

விழுது  விட்ட  பழம்
ஆலைப்  போலவே
தழுவும்  குளிர்ச்சியாய்
நிழலும்  விரிக்கிறான்

எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
அழுது புலம்பும் சிலர்
அறிவைப் பழிக்கிறான்

கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்

மெழுகு உருகவே
துலங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்

காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்

சின்னஞ் சிறியதாய்
வார்த்தை கோக்கிறான்
பெற்றம்  பெரியதாய்
ஞானம் வார்க்கிறான்.

தனக்கு வாய்த்த சந்
தோஷம் பகிர்கிறான்
தன்னைப் போல யவர்
சிறக்க நினைக்கிறான்

பட்டுத் தெளியுமுன்
பலதும் சுட்டுவான்
பசிக்கும் செவிக்குத் தேன்
பாகை யூட்டுவான்

ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்



குளிருதுங்கோ...!

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அறைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

சபீர் (நன்றி: ஜாகிர்)
இது ஒரு குளிர்கால ஸ்பெஷல் ! மீள்பதிவு..




படுமுன் தெளிக!

ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது...
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!

போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!

குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!

கண்கள் வழி 
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!

கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!

அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!

ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!

சபீர்

செவ்வாய், 29 நவம்பர், 2016




  • #முஸ்லிம்மல்லாதவரின் -#கேள்விக்கு #பதில் 
    கேள்வி:பிரச்சனைகள் உருவாவதே கடவுளின் பெயரால் தானே பின்பு இஸ்லாம் எப்புடி தீர்வாகும்???
    பதில் :சண்டைகள் கடவுளின் பெயரால் தான் நடைபெறுகிறது என்பது உண்மை ஆனால் இறைவனின் பெயரால் மட்டும் சண்டைகள் நடைபெறவில்லை,
    உதாரனமாக :மொழி பெயரால் சண்டை நடக்கிறது இதற்கு கடவுட் கொள்கை காரணமல்ல கடவுள் கொள்கை இல்லாத கம்யுனிஸ்டுகளுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யுனிஸ்ட் ,வலது சாரி கம்யுனிஸ்ட் என சண்டை நடக்கிறது .எனவே சண்டைக்குக் காரணம் மனிதரின் வக்கிர புத்தியை தவிர கடவுள் கொள்கை அல்ல
    சண்டை சச்சரவுகளுக்கு மனிதன் கடவுள் கொள்கையைக் காரணம் காட்டுகின்றான், மொழியைக் காரணம் காட்டுகின்றான் இவனிடம் குடிபுகுந்துள்ள வக்கிர புத்தியை கூறுவதில்லை. எனவே சண்டை போடுகின்றவன் எதை வைத்தாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான் இதை ஒழிக்க முடியாது.
    சகோதரரின் கேள்வியின் முக்கியைப் பகுதி என்னவென்றால் இவ்வளவும் நடக்கும் போது கடவுள் ஏன் #பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். பள்ளிவாசலை இடுக்கிறார்கள்:
    பாதியாரை எரிக்கின்றார்கள்
    இப்படி எவ்வளவோ நடந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அக்கடவுள் ஓரம் கட்டிவிட்டு,கடவுள் கொள்கை இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி எல்லாவற்றையும் இல்லாதொழித்து விடலாமே என தனது கருத்தை வெளிப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார்.
    இரு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று கடவுள் கொள்கை அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிய பின் எப்பிரச்சனைளையும் இல்லாத சமுதாயமாக வாழலாம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது பக்குவப்பட்டு சரியாக நடக்க வேண்டுமென்று உணர்வு எல்லா மக்களுக்கும் வந்துவிடாது. கண்டிப்பாக அது முடியாத காரியமும் கூட 
    ஏனெனில் கடவுள் இல்லை என ஓரம் கட்டிய பின் மனிதன் எவருக்குமே பயப்பட மாட்டான். அவனவன் தத்தமது அறிவைப் பயன்படுத்தி ஒருவனுகொருவன் துரோகம் செய்ய முற்படுவான் அபகரிப்பான். ஊழல் புரிவான் இலஞ்சம் வாங்குவான், பாதங்கள் அனைத்தும் தலைவிரித்தாடும் .
    மற்றொன்று, அநியாயங்களைக் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என தோன்றும்
    இந்த அண்டத்தை படைத்தது பற்றி கூறும் இறைவன் இது ஒரு சோதனை கூடமாகப் படைத்திருப்பதாகக் கூறுகிறான், இந்த உலகு, இதன் இன்பங்கள் போன்றவற்றிற்கு ஒரு கொசுவின் இறைக்கையளவு கூட இறைவனிடம் மதிப்பு இல்லை என இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள், எனவே தான் இறைவன் இவ்வுலகில் மனிதன் புரிகின்ற அநியாயங்களை,அட்டுழியங்களைக் கவனித்து உடனடியாகத் தண்டிக்காது, அவனுக்கு அவகாசம் வழங்கி அக்காலப் பகுதிக்குள் அவன் திருந்தி வாழ்கின்றானா? எனப் பார்க்கின்றான்.தண்டனைக்குரிய உலகம் மறு உலகு தான் .
    இங்கு இருக்கும் மக்களைக் கவனியுங்கள், இவர்களில் சிலர் இதற்கு முன்னர் குற்றம் புரிந்தர்வர்களே,ஆனால் காலப்போக்கில் அவைகளைத் தவறெனப் புரிந்து கொண்டு திருந்தி வாழ ஆரம்பித்திருகின்றனர். எனவே இப்படி ஒரு அவகாசத்தை இவர்களுக்கு கொடுக்காமல் தவறு செய்து உடனேயே,இவர்களை இறைவன் அந்த இடத்திலேயே தண்டனையாக அழித்திருந்தால் இவர்கள் இந்நிலைக்கு ஆளாகி இருப்பார்களா ? எனவே குற்றத்திற்கு உடனே இறை தண்டனை என்பது பொருத்தமற்ற ஒரு செயலாகவே நமது சிந்தனைக்குப் படுகிறது.
    மனிதன் இயல்பில் தவறுபுரிபவன் தான்,எனினும் அவன் தவறை நினைத்து திருந்தி வாழ முற்பட வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சொல்லி இருகிறார்கள்,
    இந்த பதிவை படிக்கும் அனைவரும் நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை எனத் துணிந்து கூறுங்கள் பார்க்கலாம் . முடியாது நிச்சயம் முடியாது உடனே தண்டிக வேண்டுமென்று விரும்பினால் நம் அனைவரையும் என்றோ அழித்திருக்க வேண்டும் அவ்வாறு நடந்திருந்தால் இப்புவியில் என்றோ மனித இனம் அழிந்திருக்கும்,ஆகவே புரிகின்ற தவறுகளுக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு என்ற நினைப்பு மனிதனுக்கு வந்து விடுமானால் ஒழுக்கமுள்ள வாழ்க்கையாக அவனது வாழ்வு மாறிவிடும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு .                     




புதன், 16 நவம்பர், 2016

                       
Dr.Shah Faisal,
CMO,
Civil Hospital
PESHAWARE
This message is from a group of Doctors in Pakistan:
(forwarded in public interest)

1) Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent..

2) Don't eat Mentos before or after drinking Coke or Pepsi because the Person will die immediately as the mixture becomes CYANIDE..

3) Don't eat Kurkure because it contains high amount of Plastic.
If you don't believe burn Kurkure and you can see Plastic melting.!
(News report from "Times of India")

4) Avoid these Tablets,they are very dangerous:
* D-cold
* Vicks Action-500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
* Cetrizet-D

They contain Phenyl Propanol-Amide PPA. Which causes Strokes & Are banned in USA!

 Dr.of the United States has found  new cancer in human beings, caused by Silver Nitro Oxide. Whenever you buy recharge cards, don’t scratch with your nails, as it contains Silver Nitro Oxide coating and can cause skin cancer. Share this message with your loved ones.
Important Health Tips:
○Answer phone calls with the left ear.
○Don't take your medicine with cold water....
○Don't eat heavy meals after 5pm.
○Drink more water in the morning, less at night.
○Best sleeping time is from 10pm to 4 am.
○Don’t lie down immediately taking medicine  or after meals.
○When phone's battery is low to last bar, don't answer the phone, bcos the radiation is 1000 times stronger.
○Can you forward this to people you care about?
I just did,
Kindness costs nothing
But
Knowledge is power...

 IMPORTANT

U.S.A. CHEMICAL Research Center Gives New Result : Dont Drink Tea in Plastic Cups n Dont Eat Any Food on Polythene Paper. The plastic reacts to heat n It Will Cause 52 Types of Cancers. So, This Good sms is  Equal to 100 Waste sms. Pls Forward to All   U care.



செவ்வாய், 15 நவம்பர், 2016



இயற்கை மருத்துவத்தில் சென்னையில்  இன்ஷா அல்லாஹ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான  

👉 Pcod,fibroid,weight loss,weight gain,utrus,overy problems,infertility,importance problems

👉 nervous and bone problems,disc prolapse,cronic knee pain, Back pain,joint pains, spinal guard problems etc.,

 போன்ற நாள்பட்ட பிரட்சணைகளுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் சிறப்பு தொடர் சிகிச்சை முகாம்

👉 சிகிச்சை அளிக்கும் நாட்கள் : november 16,17,18,19,20,21,22 வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது
கடந்த 15 நாட்களுக்கு முன் சிகிச்சை பெற்றவர்கள் மறுபரி சோதனை மற்றும் சிகிச்சைக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

👉 புதிதாக சிகிச்சைக்கு வர விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

👉குழந்தையின்மை க்கான சிகிச்சைக்கு வருபவர்கள் கணவன் மனைவி இருவரும் அவசியம் வர வேண்டும்.

👉பழைய reports அவசியம் எடுத்துவர வேண்டும்.

👉இன்ஸா அல்லாஹ் சிகிச்சைக்கு வரும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் அல்லாஹ் எங்கள் மூலம் நோயிலிருந்து நிவாரணத்தையும், குழந்தை செல்வதையும் தர இன்ஸா  அல்லாஹ் துவா செய்யுங்கள்.

👉 Abdul Jaleel D(Acu),Dorn therapist, pchycologist(AM)

Multi speciality Alternative natural medicines treatment & counseling

👉முன் பதிவு ,சிகிச்சை அளிக்கும் முகவரி மற்றும் இது தொடர்பான ஆலோசனைக்கு :

+91 8807224995
சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.
..............................................................................
ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை....

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை...!

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...!

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை...!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் நண்பர்பளே... அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.)
Call: 1800 2 333 555
நலம் வாழ நல்வாழ்த்துக்கள் 

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
நலம் வாழ நல்வாழ்த்துக்கள் 

அகத்தை சுத்தமாக்கும் சீரகம்

“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே"

என்பது சித்தர் பாடல். இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் பெரும் பங்காற்றுகிறது. இதனாலேயே இது சீர்+அகம்=சீரகம் என்று பெயர் பெற்றுள்ளது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட சீரகம், இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக சமையலில் சேர்க்கப்படுகிறது.

வேதிப்பொருட்கள்

சீரகத்தில் 2.5 சதவிகிதம் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து ஆல்டிஹைடுகள், பைனினி, ஆல்பா டெர்பினியோல், குயிமினின் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க:

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்ற மருந்து

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்" தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு ளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக நீரை சேர்த்துக் கொடுக்கலாம். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.

ரத்த அழுத்த நோய் குணமாகும்

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.

சிறிதளவு சீரகத்துடன் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
திருமணம் முடித்தவர்களுக்கு
  💐💐💐💐💐💐💐💐💐                                                                                                                                                                                          ஒருவன்,மற்ற பெண்களை விட தனது மனைவியை ஏன் அழகு குறைந்தவளாக காண்கின்றான்?

அறிவு ஞானமும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு மார்க்க மேதையிடம் ஒருவன் சென்று, தனது பிரச்சினையை இவ்வாறு முறைப்பட்டான்.

"எனது மனைவியை முதன் முதலாய் பார்த்து மயங்கிய போது,அவளை போன்ற ஒரு பெண்ணை அல்லாஹ் உலகில் படைக்கவில்லை என்பது போல் எனது பார்வை சொல்லியது...

அவளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது ,அவளை போன்ற பலரை கண்டேன்

அவளை திருமணம் முடித்த பின்னர் அவளை விட அழகான பலரை கண்டேன்

திருமணம் முடித்து சில வருடங்கள் கடந்த பின்னர்,மற்ற பெண்கள் அனைவரும் எனது மனைவியை விட இனிமையானவர்களாக எனக்கு தெரிந்தார்கள்

ஞானி: இதனை விட கசப்பான ஒரு விடயத்தை நான் உனக்கு சொல்லட்டுமா?

அவன்: ஆம் சொல்லுங்கள்.

ஞானி:
உலகில் உள்ள பெண்கள் அனைவரையும் நீ திருமணம் முடித்தால் கூட அவர்கள் அனைவரையும் விட அழகானதாக 'வீதிகளில் தறிகெட்டு திரிகின்ற நாய்கள்' உனக்கு தென்படும்..!

அவன்: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?

ஞானி: ஏனென்றால் , பிரச்சினை உனது மனைவியிடத்தில் அல்ல....மனிதனுக்கு பேராசை மிக்க உள்ளமும் , மதி மயங்கும் பார்வையும் வழங்கப்பட்டுள்ளது.அவை அல்லாஹ் மீதான தமது வெட்க உணர்வை இழந்து விடுவது தான் பிரச்சினை.
இவ்வாறான ஒருவனின் கண்களை மண்ணறையின் மண் மாத்திரம் தான் மறைக்க முடியும்.

தோழரே! உனது பிரச்சினை 'அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் உனது பார்வையை நீ தாழ்த்திக் கொள்வதில்லை

ஆரம்பத்தில் இருந்ததை போன்று,உலகிலேயே அழகான பெண்ணாக உனது மனைவியை மாற்றுவதற்கு ஒரு விடயத்தை சொல்லித் தரட்டுமா?

அவன்: ஆம்.சொல்லுங்கள்.

ஞானி :
உனது பார்வையை தாழ்த்திக் கொள்.

அல்லாஹுதஆலா சொல்கின்றான்." நபியே நீங்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும்,அவர்களுடைய கற்பை பேணிக்கொள்ளுமாறும் சொல்லுங்கள்.அதுவே அவர்களை தூய்மைப்படுத்தும்.அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து கொண்டிருக்கின்றான்."

நீ எதை செய்தாலும் உனது கையில் இல்லாதவற்றை தான் மிக அழகானதாகவும் ,மிக சிறந்ததாகவும் காண்பாய்.ஆனால்,அவற்றை நீ பெற்றுக் கொள்ளும் போது அவை உனது கண்களுக்கு சாதாரணமாகவே தென்படும்.

உன்னிடம் இருப்பதை பொருந்திக் கொள்..சுயநலவாதியாக இருந்துவிடாதே!
ஏனெனில்,
உன்னை கப்ரில் கொண்டு போய் மூடும் வரைக்கும் அழகின் பின்னாலும்,உலக இன்பங்களின் பின்னாலும் நீ அலைந்து திரிந்து கொண்டே தான் இருப்பாய்.

இவை அனைத்தையும் விட அழகான ,ரம்யமான ஒரு விடயத்தை சொல்லித் தருகின்றேன்.
அல்லாஹ்வை வணங்குவதிலும்,நல்ல காரியங்கள் செய்வதிலும் திழைத்திரு.
இதற்காகவே வாழ்ந்தவர்களை தவிர இதன் சுவையை யாரும் அறிய மாட்டார்கள்.

உனது மனைவியை உனது கண்களுக்கு அழகானதாக காட்டுமாறும்,அவளது அன்பை பெற்றுக்கொள்வதற்கு அருள்பாலிக்குமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கு மறந்து விடாதே.!
*******
பார்வையைத் தாழ்த்த
---திருமணம் முடித்தவர்களுக்கு----
மாத்திரம் சொல்ல வேண்டிய உபதேசமல்ல                
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
உங்களால்! முடிந்தால் -Share - பண்னுங்கள்
யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக அமையலாம்...
நலம் வாழ நல்வாழ்த்துக்கள்

சுகம் தரும் சோம்பு

அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.

நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.

வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.

ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.

கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சோம்பு

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.

இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

Tamil : Perunchirakam, Sombu

English : Anise seeds

Telugu : Sopu-pedha-jilakara

Malayalam : Perinchirakam

Sanskrit : Sthula-jeerakam

Botanical Name : Pimpinella anisum

யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்

போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரை

சேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்

மூக்குநோ யில்லை மொழி

- அகத்தியர் குணபாடம்

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற

சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

வயிற்றுவலி, வயிற்று பொருமல்

அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

கருப்பை பலம்பெற

கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க

உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல் இரைப்பு மாற

நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

சுரக் காய்ச்சல்

அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்

செவ்வாய், 1 நவம்பர், 2016

''பாட்டி இல்லாத வீடு''

பாட்டி... பாக்கு இடிக்கும்
சத்தமே - எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!

அப்பா, அடிக்க
வரும்போதெல்லாம்....
பாட்டியே எனக்கு,
பாதுகாப்பு வளையம்!

கண்ணாடி விளக்கோடு....
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!

ஆடு கோழி கூட....
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல!

கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்....
நினைத்துக் கொள்வேன்,
"அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?!" என்று.

திருநீறு பூசி, உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி,
தாத்தா சாவிற்குப்பின்.....

நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்,
எதிரே வராததில் இருக்கிறது....
அவளது அறியாமையும்,
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!

பாட்டியின் ஆசையே....
என் திருமணத்தைப்
பார்ப்பதும்,
பின் இறப்பதும் தான்!

காரணம் கேட்டால்,
"செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்"
என்பாள் அந்த மகராசி!

கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது....
மண்பானை சமையல்,
மக்காச்சோளக்கூழ்,
மரக்குதிர் மட்டுமல்ல!

தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!

பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!

இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து.....

'தாத்தா பாட்டி இல்லாத வீடு'
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!

ஒருபோதும்....
பேரப்பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!

படித்ததில் பிடித்தது